ரணிலின் யாழ்ப்பாண விஜயம்: எட்டு பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நேற்றையதினம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினது சங்க பிரதிநிதிகள் என 8 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக 04ம் திகதி முதல் 07ம் திகதி வரை விஜயம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க கோரியே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாட்டினை நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில், இன்றையதினம் மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு கட்டளையிட்டுள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply