கடற்றொழிலுக்கு சென்ற நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்கு சென்ற நபரொருவர் கடலில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அமலசூரி அன்ரனியூட் என்ற 5 பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் உட்பட மூவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது அமலசூரி அன்ரனியூட் திடீரென மயக்கமடைந்துள்ளதுடன் அவருடன் சென்றவர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply