யாழில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரை!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டது.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

கடந்த சில நாட்களாக இரண்டு வன்முறை கும்பல்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இரண்டு முச்சக்கரவண்டிகளும் தீக்கிரையாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply