வெள்ளவத்தையில் ரயிலில் மோதி வெளிநாட்டவர் பலி!

புகையிரதத்தில் மோதி வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை வெள்ளவத்தை புகையிரத கடவையில் இடம்பெற்றுள்ளது.

காலியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த புகையிரதத்தில் மோதிய நிலையில் சம்பவ இடத்திலேயே வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், உயிரிழந்த நபர் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும், குறித்த வெளிநாட்டவர் கவனக்குறைவால் இவ்வாறு உயிரிழந்தாரா அல்லது தவறான முடிவெடுத்து தானே உயிரை மாய்த்துக் கொண்டாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply