யுக்திய நடவடிக்கையில் மேலும் 680 சந்தேகநபர்கள் கைது!

நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில்  முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 680 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை ,  கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 554 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 126 சந்தேக நபர்களும்  உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 168 கிராம் ஹெரோயின், 93 கிராம் ஐஸ், 925 கிராம் கஞ்சா மற்றும் 596 போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் உள்ள 126 சந்தேக நபர்களில் 18 சந்தேகநபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 105 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply