மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் கைது!

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட வட்டவளை பகுதியில் உள்ள பாடசாலையில்  கல்விகற்கும்  மூன்று மாணவிகளை அதே பாடசாலையின்   விஞ்ஞான பாடஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் பாடசாலையில் பத்தாம் வகுப்பில் கல்விகற்கும் மூன்று  சிறுமிகளை துஷ்பிரயோகம்  செய்ய முயற்சித்ததாகவும், அவர்களுக்கு  தவறான குறுஞ்செய்திகளை அனுப்பி அசௌகரியம் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அனுப்பப்பட்ட  செய்திகளுக்கு பதில் அளிக்காததால், வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவிகள் மீது தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக குறித்த மாணவிகள்  வட்டவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதன்படி,  44 வயதுடைய சந்தேகநபரான ஆசிரியர் வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,  கைது செய்யப்பட்ட. சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply