பெலியத்த துப்பாக்கிச் சூடு: 3 சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவி!

அபே ஜன பல பக்ஷய கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்ட பெலியத்த பாரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக தேடப்படும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய இலங்கை காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

கடந்த ஜனவரி 23ஆம் திகதி பெலியத்த, வலஸ்முல்ல வீதியில் கஹவத்தை அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் வைத்து ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளனர்.

இதன் அடிப்படையில் சந்தேகநபர்களின் பின்வரும் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கூடிய விரைவில் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

தகவல் தரக்கூடிய தொலைபேசி எண்கள்,

தங்காலை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் - 0718591488
நிலைய பொறுப்பதிகாரி / பெலியத்த - 0718591497

மேலும்  சந்தேக நபர்களின் விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

01. பெயர் - மஹகமகே தினேஷ் பிரியங்கர அல்லது 'சூட்டியா' அல்லது மஹகமகே தினேஷ் பிரதீப் ஜயசேகர.                   முகவரி - டென்மார்க் காலனி, வேரகொட, கஹவ, அம்பலாங்கொடை            அடையாள அட்டை இலக்கம் - 892362890V

02. பெயர் - நாணாயக்கார அகரகே நிஷாந்த சமன் குமார் டயஸ்  முகவரி - இலக்கம் 80, யாய 4, தம்புத்தேகம. இல 84, கல்பாத, அங்குருவெல்ல.     அடையாள அட்டை இலக்கம் - 740744330V

03. பெயர் - ரன்முனி மகேஷ் ஹேமந்த சில்வா             முகவரி - இல. 107/2/ B, புவக்கஹவத்த, மாகந்தன, ஊரகஹா.                   அடையாள அட்டை இலக்கம் - 832190942V

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply