கிரிக்கெட்டுக்கான அனுமதிச்சீட்டுகளை பெறுவதில் மக்கள் மத்தியில் பதற்றம்!

தம்புள்ளை பிரதேச செயலகத்தில் இன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான T20 போட்டிக்கான அனுமதிச்சீட்டு கொள்வனவு செய்யும் முயற்சியில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது T20 போட்டிகளுக்கான அனைத்து அனுமதிச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் நேற்றைய தினம் அறிவித்தது.


ஆனால், தம்புள்ளை பிரதேச செயலகத்தில் இன்று காலை அனுமதிச்சீட்டுக்கள் வழங்கப்பட்டதையடுத்து, அனுமதிச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கு பெருமளவான ரசிகர்கள் கூடியிருந்தனர்.


மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply