கத்திரிக்கோலால் தாக்கப்பட்டு 19 வயது இளைஞன் படுகொலை!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்குருகடே சந்தியில் உள்ள கால்வாய்க்கு அருகில் இன்று  அதிகாலை இளைஞன் ஒருவன் கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த ருவன் குமார என்ற 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு  படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதும்  பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில்  சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply