விசாரணை நடத்த வந்த பொலிஸார் மீது தாக்குதல்! சீனப் பெண் கைது!

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை  தாக்கிய சீனப் பெண் ஒருவர் இன்று  பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பேருவளை மங்கள மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய சீனப் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பெண் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையே குறித்த   சீனப் பெண்  தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான இரண்டு  பொலிஸ் உத்தியோகத்தர்களும் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரான பெண்ணை களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பேருவளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply