கிரிக்கெட் மட்டையால் தாக்கி இளைஞன் ஒருவர் படுகொலை!

பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருதலாவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்  55 வயதுடையவர் எனவும்  முருதலாவ பகுதியைச் சேர்ந்தவர்   எனவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாகவே குறித்த  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்  பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply