கொலை முயற்சிக்கு உதவிய இருவர் கைது!

மோதர, லெல்லம பிரதேசத்தில் நபர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதன்படி, குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் 16 மற்றும் 21 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் கொழும்பு 15, சேடவத்த பிரதேசத்திலும், பெர்குசன் வீதியிலும் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தகவல்களின்படி, இருவரும் கொழும்பு 15 இல் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இக்கொலை முயற்சி தொடர்பான மேலதிக விசாரணைகளை மோதர பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply