வீட்டுக்குள் புகுந்த வன்முறை கும்பலால் தாக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் – நீர்வேலி அம்மன் கோவில் சாந்தி அச்செழு பகுதியில் நேற்று இரவு வீட்டுக்குள் புகுந்த வன்முறை குழு ஒன்று சொத்துக்களை அடித்துடைத்து சேதம் விளைவித்ததுடன் வீட்டிலிருந்த இருவர் மீதும் வாள்வட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் வீட்டின் குடும்ப தலைவரும் அவரது சகோதரரும் பலத்த வாள்வட்டு காயங்களுக்கு உள்ளாகி கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இரவு 10 மணி அளவில் வீட்டுக்குள் புகுந்த 20 பேர் கொண்ட குழு ஒன்று , கூரிய ஆயுதங்கள் மூலம் கதவினை உடைத்து உள்ளே புகுந்து சொத்ததுக்களுக்கு சேதம் விளைவவித்ததுடன், வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்து சென்று, பிரதான வீதியில் வைத்து தீ மூட்டி விட்டு தப்பி சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் சந்தேகத்தின் பேரில் இன்று இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply