நாடு திரும்பும் பசில்: ரணிலிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று (2024.02.23) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் நடந்தாலும், பொதுத்தேர்தல் நடந்தாலும் எதிர்கொள்வதற்கு நாம் தயார். யார் என்ன சொன்னாலும் இலங்கையில் உள்ள பலமான கட்சி எமது கட்சி என்பதே உண்மை.

இந்நிலையில், தேர்தலை எதிர் கொள்வதற்கான ஏற்பாட்டு பணிகள் இடம்பெற்று வருகின்றன. நாளை தேர்தல் வைத்தாலும் நாம் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply