முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால்  பெப்ரவரி  2 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பெப்ரவரி 15 ஆம் திகதி, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், ரம்புக்வெல்ல மற்றும் முன்னாள் சுகாதார செயலாளர் ஜனக சந்திரகுப்த உட்பட ஆறு பேர் பெப்ரவரி 29 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply