குருநாகல் வாகன விபத்தில் மூவர் பலி!

குருநாகல் பொத்துஹெர, பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மரக்கறி பாரவூர்தியுடன் எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாரவூர்தியின்  சாரதி கைது  செய்யப்பட்டுள்ளதுடன்,  மேலதிக விசாரணைகளை பொத்துஹெர பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply