மட்டக்குளி துப்பாக்கிசூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.டீ.வி காட்சிகள் வெளியானது!

மட்டக்குளி அலிவத்தை பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காக சந்தேகநபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த விதத்தை காட்டும் சிசிடிவி காட்சிகள் பொலிஸாரின் விசாரணைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5.50 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அலிவத்தே விராஜ் என்ற 24 வயதுடைய அஷான் மதுரங்க என்ற இளைஞனை இலக்கு வைத்தே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரிவால்வர் ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும் பின்னர், சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இலக்கு வைக்கப்பட்ட குறித்த இளைஞன் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பியுள்ள நிலையில், பின்னர் தன்மீது துப்பாகிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தரப்பினரின் 4 வீடுகள் மீது பாதிக்கப்பட்டவர் தரப்பினர் தாக்குத்தல் மேற்கொள்ள ஏற்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply