காட்டுயானை தாக்கி வெளிநாட்டு பிரஜை உயிரிழந்தார்!

பொத்துவில் சங்கமன்கந்த பிரதேசத்தில் மணச்சேனி காட்டுப் பகுதியில் காட்டு யானைகளால் தாக்கப்பட்டு  வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று  காலை இடம்சபெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 50 வயதுடைய இத்தாலியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் அவர் தங்கியிருந்ததாக  தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply