கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

கம்பஹா, கட்டுகஸ்தர பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று  மாலை 4.00 மணியளவில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளானவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது வீட்டில் வாகன பெயின்டிங் கேரேஜ் ஒன்றை நடத்தி வந்ததாகவும், அங்கு பணிபுரியும் போதே அவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply