போதைப்பொருளை விழுங்கி கடத்த முயன்ற இரண்டு பெண்கள் கைது!

500 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை உட்கொண்டு கடத்த முயன்ற வெளிநாட்டு பெண்கள் இருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் போதைப்பொருள் கடத்தல் முயற்சி   பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கப்பட்ட இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டது.

இரண்டு பெண்களிடமிருந்தும் இதுவரை 40 கொக்கைன் காப்ஸ்யூல்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், கடத்தப்பட்ட பொருட்களின் சந்தை மதிப்பு சுமார்  20 மில்லியன் ரூபா எனவும் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோனில் இருந்து துருக்கி நகரான இஸ்தான்புல் ஊடாக இன்று காலை துருக்கிய எயார் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இரு பெண்களும் கினி நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

40 மற்றும் 42 வயதுடைய இருவரும், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply