2002 ஆம் ஆண்டு கொலை வழக்குடன் தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனை!

கடந்த 22 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு, கேஸ் பஹா சந்தி பகுதியில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் 08 ஆகஸ்ட் 2002 அன்று இடம்பெற்றது.

இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இன்று (29) பிறப்பித்துள்ளார். 

தீர்ப்பை வழங்கிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க முடிந்ததாக அரசுத் தரப்பு தெரிவித்தது.

இதேவேளை, வழக்கின் இரண்டாம் மற்றும் நான்காம் பிரதிவாதிகளை விடுதலை செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply