போதைப்பொருள் தகராறில் நபரொருவர் படுகொலை!

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டகொட குருந்தகந்த பகுதியில் இன்று (09) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வாளால் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்திவிட்டு பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர், உயிரிழந்தவரின் மூத்த சகோதரரையும் வாளால் தாக்கியுள்ளதுடன், அவர் படுகாயமடைந்த நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார், இவர் ஹிக்கடுவ கோரலகே பிரசன்ன குமார என்றழைக்கப்படும் ஹிச்சி மல்லி, இவர் தோட்டகொடை குருந்தகந்த பகுதியைச் சேர்ந்தவர்.

கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்பட்ட மோதலில் காரணமாகவே கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply