டிக்டொக் மூலம் இலங்கையர்களை ஏமாற்றிய கும்பல்!

இலங்கையர்களை ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றும் டிக்டொக் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுவதுடன் அவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் மத்திய கிழக்கு நாடுகளுககு பணியாளர்களாக சென்றுள்ளனர்.

அவ்வாறானவர்களை குறிவைத்து, ஐரோப்பிய நாடான போலந்தில் வேலை வழங்குவதாக டுபாய் நாட்டில் இருந்து டிக் டாக் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு ஏமாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

போலந்து செல்ல முயற்சித்தவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் இந்த மோசடி கும்பல் ஏமாற்றிவிடுவதாகவும் தொலைபேசிகளுக்கு பதிலளிப்பதில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply