இலங்கையில் அதிகரிக்கும் வன்முறை: அச்சத்தில் வெளிநாட்டவர்கள்!

இலங்கையில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களை சமூக ஊடகங்களில் பார்க்கும் போது சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு அச்சம் கொள்வதாக தேசிய நாமல் உயன அமைப்பின் ஸ்தாபகர் வனவாசி ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் மேலும் கூறுகையில், இலங்கை தற்போது சிகாகோ போன்று மாறியுள்ளது. யுக்திய நடவடிக்கை செயற்படுவதாகவும், பல்வேறு ஆயுதக் குழுக்கள் பல்வேறு வழிகளில் மக்களை கொன்று குவிப்பதாகவும், பாதாள உலகம் பல மோதல்களை ஏற்படுத்துவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

சுற்றுலா எங்கள் நாட்டில் ஒரு முக்கிய தலைப்பாக மாறியுள்ளதுடன் நமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முக்கிய காரணியாக உள்ளது. சமூக ஊடகங்களில் இதுபோன்ற வன்முறை நடத்தைகளை பார்க்கும்போது, ​​வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு பயப்படுகிறார்கள்.

இதுபோன்ற உள்ளடக்கங்கள் பரவுவதைத் தடுக்க ஊடக நெறிமுறைகளை பேணுவதும் சட்டங்களைக் கொண்டுவருவதும் அரசாங்கத்தின் பொறுப்பு என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply