பெண்ணிடம் முறையற்ற விதத்தில் நடந்தவர் அடித்து கொலை!

பொத்துபிட்டிய பின்னகொடெல்ல பிரதேசத்தில் கடந்த 11ஆம் திகதி பெண் ஒருவரிடம் முறையற்ற வகையில் நடந்துக் கொண்ட நபர் ஒருவரை, அந்த பெண் தனது கணவர் மற்றும் மற்றுமொரு நபருடன் சேர்ந்து தாக்கி கொலை செய்துள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்த நபரின் தலை இரண்டாக பிளவுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான மரத்துண்டு ஒன்று காணப்பட்டதையடுத்து, பொலிஸ் மோப்ப நாயொன்று ஈடுபடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது, ​​அப்பகுதியில் உள்ள அறையொன்றின் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவரின் அருகில் அந்த மோப்ப நாய் சென்று நின்றுள்ளது.

இந்நிலையில் , சம்பவம் நடந்த பகுதியில் லயன் குடியிருப்பில் தங்கியிருந்த கொலையில் தொடர்புடைய கணவன், மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர், குறித்த பெண்ணிடம் இரண்டு தடவைகள் முறையற்ற வகையில் நடந்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து சந்தேகநபர்கள் கலவானை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply