பொருட்களுக்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோழி, முட்டைகள் மற்றும் அன்னாசிப்பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு காணப்பட்ட நீண்டகால தடைகளை சீன அரசாங்கம் நீக்கியுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுங்கப் பொதுநிர்வாக பிரதி அமைச்சர் வாங் லிங்ஜங் உள்ளிட்ட குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து , இலங்கையில் அன்னாசிப்பழ உற்பத்தியாளர்கள் மற்றும் கோழி பண்ணையாளர்கள் சீன சந்தைக்கு கோழி இறைச்சி, முட்டை மற்றும் அன்னாசிப்பழங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply