தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது உரிய வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடத்தில் வாக்களிக்க விண்ணப்பிக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியாது என்பதற்கான நியாயமான காரணங்கள் இருந்தால், ​​வேறு ஒரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க விண்ணப்பிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தேவையான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

அதேவேளை உரிய விண்ணப்பங்கள் தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகம், சரண மாவத்தை, ராஜகிரிய என்ற முகவரிக்கு ஒகஸ்ட் முதலாம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதியில் உள்ள கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட வேண்டும். கிராம அலுவலர் சான்றிதழ் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கான செல்லுபடியாகும் ஒருங்கிணைக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது அனைத்து மாவட்ட செயலகங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் www.election.lk என்ற இணையத்தளத்தில் பட்டியல் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply