கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது!

25 லட்சம் ரூபா பெறுமதியான இ-சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் விமான நிலையத்தில் இருந்து கொண்டு செல்ல முயன்ற போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு சொந்தமான பல பயணப் பொதிகள் கடந்த 26 ஆம் திகதி மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த பயணப் பொதிகள் காணாமல் போன பொதிகள் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்தன.

இதன்படி விமான நிலையத்தின் அறிவித்தலுக்கு அமைய கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணப்பொதிகளை எடுத்துச் செல்ல குறித்த நபர் சென்றுள்ளார்.
விமான நிலையத்திலிருந்து பயணப் பொதிகளை விடுவித்த குறித்த நபர், அவற்றை விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதே கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோதனையின் போது 245 இ-சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த 20 வயதுடையவர் என கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply