
காலி – அஹுங்கல்ல பகுதியில் இன்று (09) காலை 6.15 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இச்சம்பவத்தின் போது, சிவப்பு நிற ஸ்கூட்டரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடாத்தியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், காயமடைந்தவர் “பொலக்கு பெட்டி ” என்ற பாதாள உலகக்குழு உறுப்பினரின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.
துப்பாக்கி சூட்டை நடாத்தியவர்கள் தப்பி சென்றுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.