நாட்டின் பல மாவட்டங்களில் கனமழைக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுமக்கள், இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புக்களை அண்டிய பிரதேசங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply