நைஜீரியாவில் படகு விபத்து -17 சிறுவர்கள் பலி

நைஜீரியாவில், கடலின் நடுவே பயணித்துக்கொண்டிருந்தபோது, திடீரெனப் படகு கவிழ்ந்ததில்; 17 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நைஜீரியாவின் வடமேற்கு மாகாணமான சொகோடோவுக்கு அருகே உள்ள பிரதேசத்தில் இருந்து விறகு சேகரிப்பதற்காகச் சிறுவர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் படகு ஒன்றில் சென்றனர்.

இதன்போது, திடீரெனப் படகு கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஏனையோரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply