பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவரை காணவில்லை!

பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தின் மூன்றாம் வருட மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக விடுதியின் உபவேந்தர் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அம்பாறை – சேரகம வெருன்கட்டிகொட பகுதியைச் சேர்ந்த இந்த மாணவர் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேராதனை காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் விஜித விஜேகோனின் பணிப்புரையின் பேரில் பேராதனை காவல்துறையினர் மற்றும் பேராதனை பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவினரின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply