ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல்

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் அக்கல்லூரியில் கடமை புரியும் பயிற்சி ஆசிரியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதேவேளை குறித்த கல்லூரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இதே மாணவனால் பிரச்சினை ஏற்பட்டு ஆசிரியரொருவர் மீது குறித்த மாணவனின் தந்தையால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னர் நடந்த சம்பவம் தொடர்பாக எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமையும் தொடர்ச்சியான ஆசிரியர் மீதான தாக்குதல்களும் இடம்பெறுகின்றமையானது ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிக்கின்றது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply