கியேவ் மீதான ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் சாவு

உக்ரைனின் கியேவ் நகரத்தின் மீது நேற்று முன்தினம் இரவு நடந்த ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட குழந்தைகளில் ஒருவர் 5 முதல் 6 வயதுக்குட்பட்டவர் எனவும், மற்றையவர் 12 முதல் 13 வயதுக்குட்பட்டவர் எனவும், அவர்கள் உக்ரைனின் டெஸ்னியான்ஸ்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், கியேவ் நகர இராணுவ நிர்வாகம் தெரிவிக்கின்றது.

மேலும், உக்ரைன் மீது ரஷ்யா இந்த வாரத்தில் நடத்திய நான்காவது தாக்குதல் இதுவாகும். மே மாதம் முழுவதும் ரஷ்யாவினால், உக்ரைன் தலைநகர் மீது 17 தாக்குதல்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply