பிரித்தானியாவிற்குள் நுழைய முற்பட்ட நபர் பரிதாப பலி!

பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவிற்கு சட்ட விரோதமாக பயணிக்க முற்பட்ட அகதி ஒருவர் வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாகனம் ஒன்றில் ஏறி பிரித்தானியாவிற்கு செல்ல முயற்பட்ட போது, அதே வாகனத்தில் மோதி பலியாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம்  Marck (Pas-de-Calais) நகரில் இடம்பெற்றுள்ளது எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பிரான்ஸில் தங்கியிருந்த அகதி ஒருவர் வீதியின் அருகே இருந்த மரம் ஒன்றில் ஏறி, வேகமாக பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றின் மீது குதிப்பதற்கு முற்பட்டுள்ளார்.

இவ்வாறு குதிப்பதற்கு முயற்சித்த போது,  வாகனத்தின் முன்பக்கமாக விழுந்து, மோதிய நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு  உயிரிழந்த நபர் சூடான் நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply