சர்வதேச சூழ்ச்சிக்குள் சிக்கவுள்ள ரணில் – விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை!

ஸ்ரீலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சர்வதேச சூழ்ச்சி மேற்கொள்ளப்படுவதாக  ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஆகவே அது தொடர்பில் ஸ்ரீலங்கா அரசு விழிப்புடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“தற்போதைய சூழ்நிலையில் ரணில் விக்ரமசிங்கவால் மட்டுமே இந்த நாட்டை நிர்வகிக்க முடியும்.

எனவே, அவருக்கு ஆதரவு வழங்க வேண்டியது கட்டாயம். அதைவிட மாற்று வழி இல்லை. அரச தலைவரும், அரசும் விழிப்பாகவே இருக்க வேண்டும்.

ஜனாதிபதிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விதத்தில் சர்வதேச சூழ்ச்சி நடக்கின்றது.

இந்த சூழ்ச்சி ரணிலிடம் எடுபடாது என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply