அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி இளைஞர் ஒருவர் பலி!

களுத்துறையில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றின் அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வஸ்கடுவ பொக்குணவத்தை வீதியில் அமைந்துள்ள ஆடை உற்பத்தி நிறுவனத்தின் அச்சு இயந்திரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது இயந்திரம் திடீரென இயங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்திற்குள்ளான நபரை களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போதே இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply