போதகர் ஜெரொமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

போதகர் ஜெரொம் பெர்னாண்டோவினால், தாம் கைது செய்யப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்றத்தால், எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம், எஸ்.துரைராஜா, குமுதினி விக்ரமசிங்க மற்றும் சிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில்,குறித்த மனு மீதான விசாரணை தொடங்கப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், எல்லே குணவங்ச தேரர் அடங்கிய குழுவால், தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுக் கோரிக்கைக்கும் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply