வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது..!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி 2.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் வென்னப்புவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபத்தைச் சேர்ந்த 35 வயதுடைய குறித்த நபருக்கு எதிராக வென்னப்புவ பொலிஸ் பிரிவில் எட்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைகளை ஏற்பாடு செய்ய பல்வேறு நபர்களிடமிருந்து அந்த நபர் 2.5 மில்லியன் ரூபாவுக்கு மேல் பணம் பெற்றுள்ளதாகவும் ஆனால், வேலை கிடைக்காததால், பணத்தை திருப்பி தரவில்லை என, புகார் எழுந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வென்னப்புவ பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் கைது செய்யப்பட்ட நபர் இன்று மாரவில பொலிஸில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply