வீடு புகுந்து திருடிய திருடன் 2 மணித்தியாலத்திற்குள் கைது..! யாழில் சம்பவம்

ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலியை திருடிய நபர் ஒருவர் 2 மணித்தியாலத்திற்குள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று தேவை நிமித்தம் நேற்று புதன்கிழமை வெளியில் சென்றிருந்தனர்.

இதை சாதகமாக பயன்படுத்திய திருடன் குறித்த வீட்டினுள் புகுந்து ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலி மற்றும் கையடக்கத் தொலைபேசியை திருடிச் சென்றுள்ளான்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் உடனடியாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து 2 மணித்தியாலத்துக்குள் மூன்றாம் குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து திருடப்பட்ட சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை திருடன் உடனேயே விற்பனை செய்துள்ளார். அதன் மூலமாக பருத்தித்துறை காவல் குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேகநபரை இரண்டு மணித்தியாலங்களுக்குள் கைது செய்தனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் திருடப்பட்ட தங்கநகை மண்ணில் புதைத்து வைத்திருந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் மீட்க்கப்பட்டது.

அத்துடன், சந்தேகநபரையும் மீட்கப்பட்ட தங்க நகையையும் பருத்தித்துறை காவல்துறையினர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply