பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை

பகிடிவதை சம்பவம் தொடர்பில், நான்கு மாணவர்களை, பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம்  இடைநீக்கம் செய்துள்ளது.
முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் குழு புதிய மாணவர்களை பகிடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்தே  மாணவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழக நிர்வாகத்தின் கூற்றுப்படி, இரண்டாம் ஆண்டு மாணவர்கள், புதிய மாணவர்களை பல்கலைக்கழக விடுதியில் ஐந்து நாட்கள் தங்கவைத்து,  நுகர்வுக்கு தகுதியற்ற உணவை அவர்களுக்கு வழங்கியுள்ளதுடன், மேலும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply