பொலிஸ் ஜீப்பிற்கு கல் வீசிய மூவர் கைது

டயகம கிழக்கு தோட்ட பகுதியில் பொலிஸ் ஜீப் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 25 ஆம் திகதி, அப்பகுதியில் சட்டவிரோத மதுபானங்களை ஒழிப்பதற்காக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்ட ஐந்து பேரை பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் ஏற்றிச் சென்ற போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்கும் முயற்சியில், சிலர் பொலிஸ் ஜீப் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஜூன் 8 ஆம் திகதி நுவரெலியா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், சம்பவம் தொடர்பில் 22 மற்றும் 25 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர், எதிர்வரும் ஜூன் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply