ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

குருநாகல் பிரதான வீதியின் வரக்காப்பொலை – துல்ஹிரிய பிரதேசத்தில். முச்சக்கர வண்டி மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 40 வயதுடைய தந்தையும், 39 வயதுடைய தாயும், 13 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply