அவுஸ்திரேலியாவில் பேருந்து விபத்து – 10 பேர் பலி

அவுஸ்திரேலியாவின் ஒயின் பிரதேசத்தின் ஹண்டர் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரமான பேருந்து விபத்தானது அனைவரையும் சேகத்துக்குள்ளாக்கியுள்ளது.

திருமண நிகழ்வொன்றில் கலந்துவிட்டு திரும்பும்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்ப அறிக்கைகளின் படி, குறைந்தபட்சம் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிட்னிக்கு அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவத்தையடுத்து, 58 வயதான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அவுஸ்திரேலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply