கனடாவிலிருந்து இந்திய மாணவர்களை நாடு கடத்த திட்டம்

கனடாவில் உயர் கல்விக்காக சென்ற 700 இந்திய மாணவர்களை நாடு கடத்துவதற்கு கனேடிய அரசு தீர்மானித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 700 பேர் கனடாவில் உயர்கல்விக்காகச் சென்ற நிலையில், அதில் ஒருவர், போலிக் கடிதங்களையும், ஆவணங்களையும் கொடுத்து உயர்கல்வி நிறுவனமொன்றை ஏமாற்றி உள்ளார்.

இதையடுத்து, அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு டொராண்டோவில் உள்ள கனேடிய எல்லை பாதுகாப்பு குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த இந்திய மத்திய அரசு, கனடா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கனடாவில் இருந்து இந்திய மாணவர்களை நாடு கடத்துவதை நிறுத்தியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply