பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பேராதனை பல்கலை மாணவர்களின் செயற்பாடு!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 19 பேரிற்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் 21 சிரேஷ்ட மாணவர்கள், புதுமுக மாணவர்களுக்கு பழுதடைந்த உணவை உண்ணுமாறு வலியுறுத்தியதோடு, கடுமையான வார்த்தைப் பிரயோகங்களாலும் மிரட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, இந்த பகிடிவதை சம்பவம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேருக்கு கடந்த வாரம் வகுப்பு தடை விதிக்கப்பட்டிருந்தது.

பகிடிவதை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 10ஆம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில் இந்த வகுப்புத்தடை தற்காலிகமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததாக பேராதனை பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பகிடிவதை சம்பவங்கள் தொடா்பில் பேராதனை பல்கலைகழகத்தின் மேலும் 08 மாணவர்களுக்கும் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply