20 வயது யுவதி பாலியல் துஷ்பிரயோகம்! காவல்துறை உத்தியோகத்தர் கைது

20 வயதான யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஸ்நாயக்கபுர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட உத்தியோகத்தர் காவல் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றியவர் எனவும் அவர் 2021 ஆம் ஆண்டு முதல் நிகவெரட்டிய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சந்தேகத்திற்குரிய காவல்துறை உத்தியோகத்தர் பாதிக்கப்பட்ட யுவதியின் உறவினர் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, குறித்த யுவதி தனியாக இருந்த போது வீட்டிற்குள் நுழைந்த காவல்துறை உத்தியோகத்தர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

யுவதி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட ரஸ்நாயக்கபுர காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காவல்துறை உத்தியோகத்தர் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரஸ்நாயக்கபுர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply