வட தாயகத்தில் தொடரும் நில ஆக்கிரமிப்பு – கடுமையாக சாடிய சார்ள்ஸ்!

வவுனியா, வீரபுரம் பகுதியில் தமிழ் மக்களுக்கு வழங்கப்படவேண்டிய 250 ஏக்கர் காணி, பெரும்பான்மையின மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே குறித்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருந்தார்.

1994ஆம் ஆண்டு வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரபுரம் மக்களுக்காக 400 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு, வாழ்வாதாரத்திற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஏக்கர் வழங்குவதாக கூறி குடியமர்த்தப்பட்டார்கள். ஆனால், தற்போது வரை அந்த மக்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை.

இதேவேளை, ஒதுக்கப்பட்ட காணிகளில் 75 சதவீதமான காணிகள், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தை சேர்ந்த பெரும்பான்மையின மக்கள் அபகரித்திருக்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மதுராகநகரை சேர்ந்த பொதுமக்கள் தெற்கு சிங்கள பிரிவிற்குள் சென்று குடியேறுவதற்காக சிறு துண்டு காணியை கேட்டபோது, அதற்கு அந்தப் பகுதியில் உள்ள பௌத்த மதகுரு சம்மதித்தால் தான் இவர்கள் தமது பிரிவிற்குள் வரமுடியும் என்று மாவட்டச் செயலகத்தில் அன்று பதில் வழங்கப்பட்டது.

ஆனால், தற்போது 250 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை தெற்கில் இருக்கும் பெரும்பான்மையினர் அபகரித்திருக்கின்றார்கள்.

எனவே, வீரபுரம் மக்களுக்கு அந்த காணிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply