தமிழகம் மற்றும் காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை ஆரம்பம் – வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கை – இந்தியாவிற்கிடையிலான கப்பல் சேவை மிக விரைவில் ஆரம்பமாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி முதலாவது பரீட்சார்த்த கப்பல் இந்தியாவிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வரவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு யாழிற்கு பயணம் மேற்கொள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காங்கேசன்துறைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதன் முதற்கட்டமாக இந்த பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply