வீட்டு படலை கழன்று வீழ்ந்ததில் சிறுவன் பலி! முல்லைத்தீவில் பரிதாபம்

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வீட்டு வாசலில் தற்காலிகமாக பொருத்தப்பட்டிருந்த படலை (கேட்) கழன்று வீழ்ந்ததில் மூன்று வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

சம்பவத்தில் கேப்பாப்புலவு பகுதியைச் சேர்ந்த ஆதவன் லிதுசிகன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த குழந்தை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது, படலை கழன்று வீழ்ந்துள்ளது.

இதனால் படுகாயமடைந்த குழந்தை முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply